இனயம் முஸ்லிம் ஜமாத் தேர்தல் நடத்த வக்பு வாரியம் உத்தரவு.

இனயத்தில் முஸ்லீம் ஜமாத் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யும்படி வக்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தேங்காப்பட்டணம் அருகே இனயத்தில் குத்பா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளியின் நிர்வாகக்குழு கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் மூலம் முறையான நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே வக்பு வாரிய அதிகாரிகளுக்கும், அரசுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் வக்பு அதிகாரிகள் இனயத்தில் விசாரிக்க வந்த போது அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தகராறு செய்து போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போலீஸ் துணையுடன் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போதைய நிர்வாகத்திற்கு தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மைச்செயலாளர் ஜமாலுதின் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் இனயம் நிர்வாகக்குழு தேர்தலை வக்பு அதிகாரிகள் முன்னிலையில் உடனடியாக நடத்த வேண்டும் எனவும், வக்பு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்

0 கருத்து | மார்ச் 7th, 2010 at 6:41 am under  Blog திரட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."