மனிதனின் சராசரி ஆயுள் அதிகரிப்பு ஆண் & 68, பெண் & 70 வயது.

மனிதனின் சராசரி ஆயுள் அதிகரித்து ஆண்கள் 68 வயது வரையிலும் பெண்கள் அதை விட அதிகமாக 70 வயது வரையிலும் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என சுகாதார துறை இயக்குனர் இளங்கோ தெரிவித்தார்.
ஓட்டல்களின் உணவு பொருட்களை கையாளும் விதம் குறித்து அதில் பணியாற்றும் ஊழியர், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது. மதுரை மாநகராட்சி ஆணை யாளர் செபாஸ்டின் தலை மை வகித்தார். தமிழக சுகாதார துறை இயக் குனர் இளங்கோ துவக்கி வைத்து பேசிய தாவது: தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் இந்த பயிற்சி அளிக்கப் படுகிறது. விரை வில் தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயிகள் தான் முழுமையாக வீட்டில் சமைத்து சாப்பிடு கிறார்கள். நகர் பகுதிகளில் வாழ்வோர், வெளியிட ங்களில் வேலை செய் வோர், நீண்ட தூரம் வேலை க்கு செல்வோர், கண வன், மனைவி இரு வரும் மாதச் சம்பளம் வாங்குவோர் போன்றோர் வீடுகளில் சமையலை குறைந்து ஓட்டலை நாடுகிறார்கள். சமீப காலமாக ஓட்டலில் சாப்பி டுவோர் எண் ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. எனவே ஓட்டல்களில் சுகாதாரமான சத்துள்ள, ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும். சமைத்த உணவை கெட்டுப் போகாமல் பாது காப்புடன் வைத்திருந்து வழங்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப உணவு வகைகள் மாறி உள்ளன. எனவே அதற்கு ஏற்ப ஓட்டல்களில் உணவு வழங்க வேண்டும். அதற்காக தான் இந்த பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்தபோது மனிதனின் சராசரி வயது 44 வயதாக இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வின்படி சராசரி வயது ஆண்களுக்கு 68, பெண்களுக்கு 70தாக உள்ளது. அம்மை, பிளேக், மலேரியா, காலரா போன்றவை ஒழிக்கப்ப ட்டுள்ளதாலும், நவீன மருத்துவ முறைகளாலும் மனிதனின் சராசரி வாழ் நாள் அதிகரித்துள்ளது.

மேலும்

0 கருத்து | மார்ச் 7th, 2010 at 6:41 am under  Blog திரட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."