வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமக நாளை தமிழகம் முழுவதும் போராட்டம்

ramadoss pmkவன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, தமிழகம் முழுவதும் நாளை(புதன்கிழமை) பா.ம.க. சார்பில் சமூகநீதி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னையிgk maniல் நடைபெறும் போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் மிகப் பெருபான்மை மக்கள் தொகையை கொண்ட வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மிகமிக பின்தங்கி உள்ளதால் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டுமென பல வருடங்கள் டாக்டர் ராமதாஸால் போராட்டம் நடத்தப்பட்டு 21 உயிர்கள் பலிகொடுத்து லட்சக்கணக்கானோர் சிறை சென்று பின்னர் 1989-ல் 107 சாதிகளுக்கு சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதில் ஆரம்பத்தில் வன்னியர்களுக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் அது 109 சாதிகளுக்காக அறிவிக்கப்பட்டது. தற்போது பார்த்தால் அரசின் ஒவ்வொரு துறையிலும் வன்னியர்களுக்கு 6 சதவீதம், 7 சதவீதம் என்ற அளவில் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசின் புள்ளி விவரத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.

எனவேதான், தமிழகத்தில் மிக அதிகப்பெரும்பான்மை மக்கள் தொகையை கொண்ட வன்னியர்களுக்கு உரிய பங்களிப்பு இல்லாததால் வாழ்வுரிமைக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி சமூகநீதி போராட்டம், தமிழ்நாடு முழுவதும் 28 ஆம்  தேதி (புதன்கிழமை) எல்லா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ், காஞ்சீபுரம்- டாக்டர் அன்புமணி ராமதாஸ், சேலம்- ஜி.கே.மணி, அரியலூர்- ஜெ.குரு, நெல்லை- வடிவேல் ராவணன், வேலூர்- முன்னாள் மத்திய அமைச்சர் இரா.வேலு ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்,” என்று ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

0 கருத்து | ஜீலை 27th, 2010 at 9:53 pm under  BreakingNews, அரசியல், தமிழகம்
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."