தமிழக முதல்வருக்கு “நல்லிணக்க நாயகர்” விருது!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதலமைச்சர் கலைஞருக்கு “நல்லிணக்க நாயகர்” விருது அக்டோபர் 4ஆம் தேதி வழங்கப்படுகிறது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம் காதர் மொய்தீன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். எனவே தமிழ்நாட்டில் மாநகராட்சி உள்பட 42 மாவட்டங்களை உருவாக்கி உள்ளோம்.
இங்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. மேலும் அங்கு மாவட்ட தேர்தல் நடத்தி புதிய நிருவாகிகள் தேர்வு செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக 5 நாள்கள் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுதான். இந்த மாநாடு எந்தவிதமான அரசியல் சார்பும் இல்லாமல் நடந்தது.
அதை சிறப்பாக நடத்திக் காட்டிய முதலமைச்சர் கலைஞருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டுகள். எங்கள் கட்சி சார்பில் 60 ஆண்டுகளாக மத நல்லிணக்க விருதுகள் வழங்கி வருகிறோம்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று 3 பேருக்கு வழங்கி வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு அந்த 3 பேருக்கும் வழங்கும் விருதை, நமது முதல்வர் கலைஞருக்கே வழங்க உள்ளோம். அதாவது முதல்வருக்கு நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற விருது வழங்கி பாராட்ட உள்ளோம்’ என்றார்.
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


