தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஒத்துழைப்பு தேவை:முதல்வர் கருணாநிதி

tn cm2தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். எனவே இடஒதுக்கீடு பிரச்சனையில் இருப்பதை இழக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு, முதல்வர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அதில், அருந்ததியருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு என நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என, உச்சநீதிமன்றத்தில் 1994ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டும் எனில், தேவையான புள்ளி விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அதை ஆணையம் ஆராய்ந்து இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தேவைப்படும் 400 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டுப் பெறலாம் என, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

எனவே, உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்தில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுத்தால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற பிரச்சனையில் உடனடியாக அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு, உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

இதில் அவசரம் காட்டினால், பிரச்சனை திசை திரும்பிவிடக் கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக் கூடாது என்பதாலும், அனைவரும், இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

0 கருத்து | ஜீலை 30th, 2010 at 1:02 am under  BreakingNews, தமிழகம்
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."