புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகம்: எஸ்.ஒய்.குரேஷி
ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் என்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார்.
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேர்தல்களில் பண பலத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கருப்பு பணம் அதிகமாக புழங்குகிறது. இதை கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். இதற்காக, அனுபவம் வாய்ந்த, சிறந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு சீர்திருத்தங்களை உருவாக்கி உள்ளோம்.
ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும். நாட்டில் தற்போது ஆயிரத்து 100 அரசியல் கட்சிகள் உள்ளன. அரை மணி நேரத்துக்கு ஒரு கட்சி வீதம், பதிவு செய்யப்படுகிறது.
பெயர் அளவுக்கு செயல்படும் இத்தகைய கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களில் இந்த அதிகாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!



