ராமதாஸ்,திருமாவளவன் ஜாதி இந்துக்களுக்கு உரிமையை பெற்றுத்தர முன்வரவில்லை.எச்.ராஜா

தமிழகத்தில் ஜாதியினருக்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் கிருஷ்ணசாமி சேதுராமன் போன்றவர்கள், அவர்கள் ஜாதி இந்துக்களுக்கு உரிமையை பெற்றுத்தர முன்வரவில்லை.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மாநில துணை தலைவர் எச்.ராஜா கூறினார்
மதுவிலக்கு அமல்படுத்துவது நல்லது தான். ஆனால் தமிழகத்தில் வருமானம் பாதிக்கும் என்பதால், தற்போதைய ஆட்சியாளர்கள் அந்த நடவடிக்கைக்கு முன்வரமாட்டார்கள்.
கடந்த 2008 முதல் மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை அதிகரிக்கின்றன. இந்து மாணவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்த முடிவு செய்யப்படும். பெரும்பான்மை இந்து மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, என்ன செய்யப்போகிறார்கள்.
தமிழகத்தில் ஜாதியினருக்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் ராமதாஸ், சேதுராமன், திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள், அவர்கள் ஜாதி இந்துக்களுக்கு உரிமையை பெற்றுத்தர முன்வரவில்லை என்றார்.
Tags: எச்.ராஜா, திருமாவளவன், ராமதாஸ்
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


