அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை: தா.பாண்டியன்
தி.மு.க., காங்கிரஸ் உறவு பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். அதனால் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாளை முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவகங்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்து மாநிலக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. எண்ணெய் நிறுவனங்கள் 3 ஆயிரத்து 996 கோடி லாபம் ஈட்டியுள்ளது. விலை உயர்வுக்கு நஷ்டம் என்பதை காரணமாக கூற முடியாது என்றார்.
மேலும் பேசிய அவர், கூட்டணி குறித்து தமிழக காங்கிரசார் முடிவு செய்ய மாட்டார்கள். அந்த முடிவை சோனியாதான் எடுப்பார். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும்.அதனால் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே இந்த இரு கட்சிகளுக்கு எதிரான ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் நீடிப்போம். தேமுதிகவும் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றார்.
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


