பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்!

tn cm2

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு எழுதயுள்ள  கடிதத்தில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பான பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை உயர்வு சாதாரண மக்களையும் விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 கருத்து | பிப்ரவரி 27th, 2010 at 4:48 pm under  BreakingNews, இந்தியா
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."